பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 755 விஷயம் என்னவென்றால், அதற்கு முதல் நாள் இரவு ட்ரீம்லேண்ட் ஹோட்டலில் அய்யங்காரைச் சந்தித்து அளவளாவுமாறு நட்சத்திரத்தை வேண்டிக் கொண்டிருந்தார் பத்மநாபன் எல்லாம் பணத்துக் காகத்தான்! அறுபதாவது வயதைத் தாண்டி விட்டிருந்தாலும் அய்யங்கார்தான் அரோகரா பாங்கியின் சர்வ வல்லமையுள்ள ஸெக்ரடரி. அதற்காக அண்டர் கிரவுண்ட் பிராந்தியால் அவர் தாகத்தையும், அழகை விலை கொடுத்து வாங்கும் நட்சத்திரங்களால் அவர் மோகத்தையும் தீர்ப்பது படாதிபதி பத்மநாபனின் தவிர்க்க முடியாத கடமையாய் இருந்து வந்தது. ஆயினும் லீலாவைப் பொறுத்தவரை, தனக்குத் தெரிந்து அவள் வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர் விரும்பவில்லை அய்யங்காரோ, இருக்கவே இருக்கிறது, மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன் என்ற நம்பிக்கையில் அவள்தான் வேண்டுமென்று கேட்டு விட்டார் - என்ன செய்வார் பத்மநாபன், பாவம் “சரி” என்று வேண்டா வெறுப்புடன் சொல்லி விட்டார். இவர்கள் இருவரையும் திருப்தி செய்யும் நோக்கத்துடன் நட்சத்திரம் அன்றிரவு ட்ரீம் லேண்ட் ஹோட்டலுக்குச் சென்றாள். தன் சாகசத்தால்