பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 35 வருகிறார்கள். இந்த அழகான சம்பள விகிதத்துடன் இப்போது பஞ்சப்படியும் பலவிதமாகக் கொடுக்கப் படுகிறதென்பதை யாரும் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனாலும் விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருக்கும் இந்தக் காலத்தில் மேற்கூறிய சம்பள விகிதங்கள், பஞ்சப்படிகள் எல்லாம் எந்த மூலைக்கு? இவ்வாறு எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் - தொழிலாளிகள் பொறுமையுடன் காலம் தள்ள முடியும்? இந்த நிலையில், "அவசரப்பட வேண்டாம்!" என்று தொழிலாளிகளுக்கு உபதேசம் செய்யும் தேசபக்தர்களின் உண்மையான நோக்கம், அவர்கள் வாழ வேண்டும் என்பதா, சாக வேண்டும் என்பதா ? ཞ༤$ཉི་> அன்றைய வாழ்க்கைச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆடம்பரங்களும் வசதி வாய்ப்புகளும் கூடியுள்ள இன்றைய நிலையிலும் கீழ்த் தட்டு மக்கள் நிலை மாறாமலேயே - வறுமைக்கோடு என்பதற்குக் கீழேயே பலகோடி மக்கள் பாரதப் புண்ணிய பூமியில் வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்