பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வேலை நிறுத்தம் ஏன்? "சுதந்திரத்துக்காகச் சிறைவாசம் " என்பது போய், "பதவிக்காகச் சிறைவாசம் !" என்று ஆகிவிட்டது இதைச் சிலர் மறுக்கலாம். மறுத்தாலும் உண்மை பொய்யாகி விடாது; மறுக்காவிட்டாலும் பொய் உண்மையாகி விடாது சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்த பொதுஜன விரோதிகள் பலர், தங்கள் சுயநலத்தைக் காந்திக் குல்லாய் போட்டு மறைத்துக் கொண்டு, காங்கிரஸ்பிக்குள் நுழைந்து விட்டனர். எப்படியாவது பதவிகளைக் கைப்பற்றித் தங்களுடைய சுயநல உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தயாராகி விட்டனர். இதனால் நாளடைவில் டாடா, பிர்லா போன்ற பெரிய பெரிய முதலாளிகள் விரித்த வலையில் காங்கிரஸ் மகாசபை வீழ்ந்தது காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடும்போதெல்லாம் மேற்கூறிய முதலாளிகள் அதன் அங்கத்தினர்களுக்கு உண்டி, உபச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இதனாலெல்லாம் நாளுக்கு நாள் காங்கிரஸில் அவர்களுடைய செல்வாக்கு மிகுந்தது