பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வேலை நிறுத்தம் ஏன்? அவற்றைத் தாக்கி எழுதும் தேசீயப் பத்திரிகைகளும் இல்லை! அதிலும், சம்பள விஷயத்தில் மற்ற மாகாணக் காங்கிரஸ் மந்திரிகளைத் தோற்கடித்துவிட்ட சென்னை மாகாணக் காங்கிரஸ் மந்திரிகள், தொழிலாளிகளின் உரிமைப் போராட்டங்களை, அடக்கு முறைகளைக் கொண்டு நசுக்கும் விஷயத்திலும் மற்ற மாகாணங் களைத் தூக்கியடித்து விட்டனர், ! முன்போல் அவர்கள் தொழிலாளர் கூட்டங்களில் கலந்து கொண்டு காரசாரமான பிரசங்கங்கள் செய்வ தில்லை தொழில் மந்திரியான கனம் வி.வி. கிரி மந்திரியா வதற்கு முன்னால் ஓரிரண்டு தொழிலாளர் சங்கங்களில் தாம் வகித்து வந்த தலைமைப் பதவியையும் மந்திரி யானவுடன் ராஜினாமாச் செய்துவிட்டார்.! ராஜாஜிக்குப் பதிலாகத் தாம் பிரதம மந்திரியாக வந்துவிட வேண்டுமென்று காந்திஜியின் ஆணையைக் கூட மீறிய பிரதம மந்திரி பிரகாசம், வாழ்க்கை முறையில் ஒருபோதும் நிரந்தர வெற்றியடைய முடியாத மகாத்மாவின் கதர்த் திட்டத்தைச் சட்டத்தின் மூலம் மக்களிடையே திணிக்கும் விஷயத்தில் கண்ணுங் கருத்துமாயிருந்து வருகிறார். அதிலும், பொது ஜனங்களின் பரிபூரண எதிர்ப்புக்குப்பாத்திரமாகியிருக்கும் பஞ்சாலைத் தடை