பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 75 விந்தன் எழுதிய தெருவிளக்கு முதல் அத்தியாயம் பொழுது புலர்ந்தது ஆம், "யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன் காரியம் எந்த விதமான விக்கினமும் இன்றி நடந்தால் சரி' என்று நினைக்கும் சுயநலவாதியைப் போலச் சூரியன் வழக்கம் போல் கிழக்கே உதயமானான். அவனைக் கண்டதும் புழுதி மிக்க அந்தத் தெருவிலே புள்ளினங்கள் ஆர்க்கவில்லை; விரைந்து செல்லும் சைக்கிள் மணிகளும் பறந்து செல்லும் காரின் ஹாரன்களும் தான் ஆர்த்தன. செந்நிறக் கிரணங்களை வீசி அந்தத் தெருவைப் பொன்னிற மாக்கவில்லை அவன், போக்கிடம் அற்றவர்கள் புழுதியின் நிறத்தை ஒத்திருந்ததால்! கட்சிச் செலவில் சேவை செய்யும் அரசியல் வாதியைப் போலக் கார்ப்பொரேஷன் செலவில் அவர் களுக்காக இரவெல்லாம் கண் விழித்துச் சேவை செய்த மயக்கத்தில் பொழுது விடிந்ததுகூடத் தெரியாமல்