பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 77 விளக்குகளையும் இழந்துவிட்டு, அந்தத் தெரு விளக்கின் அடியிலே இரந்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஒருத்தி - பரந்து கெடுக இவ்வுல கியற்றியான்' என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் சாபம் இன்றுவரை பலிக்காததால்! அவள்தான் முத்தாயி - அவளுக்கு ஒரு மகன்; பெயர் ரத்தினம். முத்தாயிக்கு அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஒரே சொத்து ரத்தினம் அந்தச் சொத்துக்கு மனம் இருந்ததோடு மானமும் இருந்து தொலைந்தது - உருப்படவா? - ஊஹ-ம்! முதல் நாள் முழுவதும் மூட்டை தூக்கிச் சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து வைத்திருந்த ஒரணாவுக்கு இரண்டு இட்டிலிகளை வாங்கித் தாயாருக்கு எதிரே வைத்துவிட்டுக் குடி தண்ணிருக் காகத் தெருக் குழாயைத் தஞ்சமடைந்திருந்தான் அவன் - அங்கும் ஏகப் போட்டி - ஜாதி, சமய, அனுஷ்டான, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வைத்து! பாவம், தெருக் குழாய் என்ன செய்யும்? அவர்களுடைய அறியாமையைக் கண்டு அழுவது போலச் சொட்டுச் சொட்டாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தது.