பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 97 "என் வேலைதான்!" "சரி, பார்த்துவிட்டால் போச்சு!" "நீ யாரடா பார்ப்பதற்கு? - எட்டிப் போடா, கழுதை' என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளினான் பீதாம்பரம். அப்பொழுதும் அவன் அசைந்து கொடுக்காமல், 'தப்பு உங்களுக்கு சேரவேண்டிய கெளரவத்தை எனக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கப் பார்ப்பது ரொம்ப ரொம்பத் தப்பு அடியேன் நாய் தாங்கள்தான் என் மதிப்பிற்குரிய கழுதை" என்றான். 'ஜாக்கிரதை! உனக்குக் குரைக்கத் தெரிந்தால் எனக்கு உதைக்கத் தெரியும்!" என்றான் அவன் கோபாவேசத்துடன், "உனக்கு உதைக்கத் தெரிந்தால் எனக்குக் கடிக்கத் தெரியும்!" என்றான் ஒ கே. பீதாம்பரத்துக்கு ஆத்திரம் தாங்கவில்லை; அவன் கன்னத்தில் பளிரென்று அறைந்து விட்டான். வழக்கம் போல் அதையும் பொருட்படுத்தாமல், "ஓ.கே! கதை தெரியுமா, உங்களுக்கு?" என்று கேட்டுக்கொண்டே பீதாம்பரத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தான் அவன்.