பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வேலை நிறுத்தம் ஏன்? அதற்குள், "என்ன கதை?" என்று கேட்டபடி, அங்கே வந்து விட்டார் பட அதிபதி. "ஏறுங்கள், சொல்கிறேன்!” என்று அவருக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு, "வரட்டுமா சீரியோ?" என்று பீதாம்பரத்தை நோக்கிக் கையை ஆட்டிய வண்ணம் விடை பெற்றுக்கொண்டான் ஓ.கே கார் கிளம்பிற்று இனிமேல் பிடிக்க வேண்டிய காக்காக்களையெல்லாம் இந்தப் பயலே பிடித்து விடுவான் போலிருக்கிறதே? இவனை முதலில் தொலைக்க வேண்டும்!" என்று கருவிக்கொண்டே பீதாம்பரம் திரும்பினான் "கதையைச் சொல்லவே யில்லையே?’ என்றார், காசில்லாமல் கதை தேடுவதிலேயே எப்பொழுதும் கவனமாயிருக்கும் படாதிபதி பத்மநாபன். 'சொல்கிறேன் - இப்போ எங்கே போக வேண்டும் என்று நீங்கள் சொல்லவேயில்லையே?" என்றான் ஒ கே. "ஸ்பென்ஸர்" என்று சொல்லிவிட்டு, 555 சிகரெட் ஒன்றை எடுத்துத் தட்டிப் பற்ற வைத்தார் படாதிபதி "எங்கள் கதையில் உங்களுக்கொன்றும் சம்பந்த மில்லையே?’ என்றான் ஒ கே.