பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வேலை நிறுத்தம் ஏன்? "ஒ, தெரியுமே! காய்ந்த பீர்க்கங்காயின் கூடுக்குப் பதிலாகப் பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் உடம்பைத் தோய்த்துக் குளிப்பதற்காக உபயோகிக்கும் கடற்பஞ்சு!" "பலே, நம்ம ஹீரோயின் நிசிலிலாவுக்கு அது ஒன்று வேண்டுமாம்; நீ எதற்கும் நாலாக வாங்கிக் கொண்டு வந்துவிடு!" என்று இரு நூறு ரூபாய் நோட்டுக் களை எடுத்து அவனிடம் நீட்டப் போனவர் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய், "வேண்டாம், வேண்டாம் - நீ இங்கேயே இரு நானே போய் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போனார். "அட பாவமே, அந்தப் பாக்கியம் கூடவா எனக்கு இல்லை?” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான் ஓ.கே. நான்காம் அத்தியாயம் 'கோலாகலா ஸ்டுடியோ' விஷயம் என்னவென்றால், அன்றைக்கு முந்திய நாள் இரவு பிரபல நட்சத்திரங்களான மிஸ்டர் கலா மோகனுக்கும் மிஸ் நிசிலிலாவுக்கும் கோலாகலா ஸ்டூடியோவில் ஷஅட்டிங் இருந்தது.