இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மார்க்கின் அறம் என்றும் 'உள்ளியது' (30) என்பதற்குக் கூட்டுடைமைக் கொள்கை என்றும் இவ்வாறாக இலெனின் கொள்கைகட்கேற்பத் திருக்குறளின் சொற்களுக்குப் பொருள் சொல்லப்பட்ட பான்மை போற்றற்குரியது. 22 ஆம் பாடலில் புரட்சித் தீ வருகைக்குக் காரணம் குறளை ஒட்டிக் கூறிய பாங்கும் பாராட்டுதற்குரியதாகும்.
மொத்தத்தில் இது கருத்துச் செறிவான புதுமை நூல்.
பாவேந்தராம் புகழ் பெறற் குரிய நம் அன்பர் த. கோவேந்தன் அவர்களுடைய பாப்புனையும் திறம் ஓங்கி வளர்க ! அவர்தம் நூல்கள் மன்பதைகட்கு நல்லற உணர்ச்சி தருவன வாகுக!!
கா. ம. வேங்கடராமையா
திருப்பனத்தாள்,
10-5-1972.