பக்கம்:வைணமும் தமிழும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

83


'ஒருத்தி' என்றால் தெரியுமோ? இன்னாள் என்று குறிப்பிட வேண்டாவோ? என்னில்: வேண்டா; ஒருத்தி என்றபோதே அவள் பாரங்குசநாயகி என்று அறிந்து கொள்வார். இங்ஙனம் மதியெல்லாம் உள்ளடங்கி மயங்கும்படியாகத் தன்னைச் செய்து வைக்கப் பெற்றவள் இந்நிலத்தில் பராங்குசநாயகியைத் தவிர வேறு யாரும் இல்லையாதலால் சிறப்பித்துச் சொல்ல வேண்டியதில்லை. இங்கே நம்பிள்ளை ஈடு: “ஒருத்தி என்றால் அறியுமோ? என்னில் : எய்தவன் கை உணராதோ? இன்ன காட்டிலே மான் பெடை ஏவுடனே கிடந்து உழையா நின்றதென்று ஊரிலே வார்த்தையாடினால் எய்தவன் கை உணராதோ 'நீயன்றோ எய்தாய்’ என்று சொல்ல வேண்டாவிறே” என்பது.

பாசுரத்தின் இறுதி அடியின் நயத்தையும் காண்போம். 'ஒருத்தி அறிவு கலங்கினாள்' என்று கூறுங்கள் அது கேட்ட எம்பெருமான் 'தன்னதான அறிவு கலங்கப் பெற்றாலும் நாம் கொடுத்த அறிவு இருக்குமே அது கொண்டு ஆறியிருப்பள் என்பன்; அப்போது 'மதியெல்லாம் கலங்கிற்று' என்று கூறுங்கள். அது கேட்ட எம் பெருமான் நாம் கொடுத்த அறிவு அப்படிக் கலங்கி விடாது கலங்கினாலும் மேலெழச் சிறிது கலங்குமேயல்லது உள்ளே கம்பீரமாகவே இருக்கும் என்பன். அப்போது 'மதியெல்லாம் உள் கலங்கிற்று' என்று எடுத்து இயம்புங்கள். அது கேட்ட எம் பெருமான் எல்லாம் கலங்கிப் போனால் என்ன? நாம் இருக்கிறோம். பின்பு நாம் அணுகும்போது அறிவு கொடுத்துக்கொள்ளுகிறோம்' என்பன். அப்போது 'மயங்குமால்' என்று கூறுங்கள். அதாவது'முடியும் தருணமாயிற்று’ என்று விளக்குங்கள். 'மயங்கினாள்' என்று