இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
வைணவமும் தமிழும்
என்று போற்றிப் புகழ்வர் வில்லிபுத்துராரின் திருமகனார் வரந்தருவார் வேதாந்த தேசிகரும்,
- பாட்டுக்கு உரிய பழையவர்
- மூவரைப் பண்டு ஒருகால்
- மாட்டுக்கு அருள்தரும் மாயன்
- நலிந்து வருத்துதலால்
- நாட்டுக்கு இருள்செக நான்மறை
- அந்தி நடைவிளங்க
- வீட்டுக்கு இடைகழிக் கேவெளி
- நாட்டும் அம் மெய்விளக்கே.[1]
- பாட்டுக்கு உரிய பழையவர்
[மாடு - செல்வமாகிய ஆன்மா; நான்மறை அந்தி - உபநிடதம்; நடை - வழி, வெளி - உபாயங்கள்]
என்று போற்றியுள்ளார். அவரே இந்த வரலாற்றையும் 'தீங்கரும்பு கண் வளரும்?'[2] என்ற திருமங்கையாழ்வாரின் திருமொழியையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் ஆலையின் உருளைகளாகவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானை நெருக்குண்ட இடமாகிய திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும் அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் உருவகித்து ஒரு வடமொழிச் சுலோகத்தாலும்[3] பாராட்டியுள்ளார். மேற்குறிப்பிட்ட திருக்கோவலூர் நிகழ்ச்சிக்குப் பின்னர், இம்மூவரும் திருவல்லிக்கேணியில்