பக்கம்:வைணமும் தமிழும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வைணவமும் தமிழும்



தேர்ச்சிப் பெற்று செவிக்கினிய செஞ்சொற்கவிகளைப் பாட வல்லவராய்த் திகழ்ந்தார். அதனால் ‘மதுரகவி’ என்ற திருநாமமும் பெற்றார். மெய்யுணர்வினால் அவாவற்றுத் திருமால் பக்தி விஞ்சி தீர்த்த யாத்திரையிலும், திவ்வியதேசயாத்திரையிலும் திருவுள்ளங் கொண்டு வடநாட்டுத் திருப்பதி களைச் சேவித்துக் கொண்டு திருஅயோத்தியில் தங்கியிருந்தார்.

ஒருநாள் திருக்கோளுர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திசையில் கண்செலுத்திய பொழுது அப்பக்கத்தில் வானுறவோங்கி விளங்கும் திவ்வியமான ஒரு பேரொளியைக் கண்டார். இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் கண்டு வியப்புற்று விடுப்பூக்கத்தினால் (Curiosity) உந்தப்பெற்று அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நெடுவழி கடந்து ஆழ்வார் திருநகரியை அடைந்தார். அடைந்தவர் உறங்காத்திருப்புளியாழ்வாரின் அடியில் யோகத்திலிருந்த நம்மாழ்வாரின்திருமேனியைச் சேவித்தார். கண்மூடி மெளனியாய் இருந்த அவரைச் சோதிக்கும் பொருட்டு சில உபாயங்களை மேற்கொண்டார். ஆழ்வாரும் அவர் கேட்ட வினாக்கட்கு விடையருள மதுர கவியும் அவரது ஞான பக்தி வைராக்கியத்தில் ஈடுபட்டு அவரையே ஞானாசிரியனாகக் கொண்டு சரணம் புகுந்தார். நம்மாழ்வாரும் தாம் அருளிய நான்கு பிரபந்தங்களையும் மதுரகவிகளுக்கு உபதேசித்தார். அவரும் அப்பிரபந்தங்களைக் கைத்தாளமெடுத்துப் பண்ணிசையோடு ஒதிக் கொண்டு ஆழ்வாரின் தலைமைச் சீடராய்த் திகழ்ந்தார். ஆழ்வார் திரு நாட்டை அலங்கரித்த பின்னரும் அவருடைய அர்ச்சை உருவமான திருமேனியை அத்திருநகரில் எழுந்தருளப்பண்ணி