பக்கம்:வைணமும் தமிழும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

113



நித்திய நைமித்திக உற்சவங்களை நடத்திக் கொண்டும், தம் ஆசாரியரின் பெருமைகளை வெளியிட்டுக் கொண்டும் சிலகாலம் அத்தலத்திலேயே காலங்கழித்துப் பின்பு அத்திருத் தலத்திலேயே சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தான அந்தமில் இன்பப் பெருவீட்டை அடைந்தார்.

இவரது அருளிச் செயல் : தம்முடைய குருநாதர்மீது 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பதினொரு பாசுரங்களடங்கிய திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்தார்.இது நாலாயிரத்தில் முதலாயிரத்தின் இறுதிப் பிரபந்தமாகச் சேர்க்கப்1பெற்றுள்ளது. இஃது எட்டெழுத்து மந்திரமாகிய பெரிய திருமந்திரத்தின் மிக முக்கியமான 'நமப் பதத்தின்' பொருளை விளக்குவதாகக் கொண்டுள்ளனர் பெரியோர்கள்.

இவர் வாழ்ந்த காலம் : இவரை நம்மாழ்வார் வாழ்ந்த காலமாகக் கொள்வர் ஆராய்ச்சி அறிஞர்கள். பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்வர்.

இறுவாய்: ஆழ்வார்களை பன்னிருவரில் பொய்கையார், பூதத்தார், பேயார், ஆண்டாள், திருப்பாணாழ்வார் ஆகிய ஐவரும் மனித யோநியில் பிறந்தவர்களல்லர். திருமழிசையார் தேவயோநியில் மனித உருவத்தில் பிறந்தவர் அல்லர். பெரியாழ்வார், தொண்டரடிப்பொடிகள், மதுரகவிகள் ஆகிய மூவரும் பார்ப்பன மரபினர். குலசேகராழ்வார் அரச(சத்திரிய) மரபினர்.திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தவர். நம்மாழ்வார் வேளாளர் மரபினர். இப்படிச் சொல்வதைவிட எல்லோரும் தொண்டக்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதே சிறப்பு.