திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா
123
பாசுரத்தொகை 224. 'இன்று இரக்கம் இன்றி' (10.2;1) என்ற பாசுர அபிநய வியாக்கியானம் நடைபெறும். இராம ராவணப்போர் முடிந்தது. இராவணன் அழிந்தான்; சில அரக்கர் எஞ்சினர். அவர்கள் தம் தோல்வியை ஒப்புக் கொண்டு பறை கொட்டி 'பொங்கத்தம் பொங்கோ'(10.2) என்ற ஒலிக் குறிப்புத் தோன்றக் கூத்தாடுவதைக் கூறும் பாசுரம் இது.[1]
பிற்பகலில் பெரிய திருமொழியின் சாற்றுப் பாசுரமான 'மாற்றமுள ஆகிலும்'(11.8) பதிகத்தின் இறுதிப் பாசுரமான 'குன்றம் எடுத்து' (11.8;10) என்பதைச் சேவிப்பார். பின்னர் திருநெடுந்தாண்டகத்தின் சாற்றுப் பாசுரமான,
- அன்றுஆயர் குலமகளுக்கு
- அரையன் தன்னை
- அலைகடலைக் கடைந்துஅடைத்த
- அம்மான் தன்னைக்;
- குன்றாத வலியரக்கர்
- கோனை மாளக்
- 'கொடுஞ்சிலைவாய்ச் சரம்துரந்து
- குலம்க ளைந்து வென்றானை (29)
- அன்றுஆயர் குலமகளுக்கு
என்பதைப் பாடும்போது பெருமாள் அருளிப்பாடு இட, இப்பாசுரத்தில் கூறப்பெற்றுள்ள இராவணவதத்தை நடித்துக் காட்டுவார் அரையர். இராவணவதம் முடிந்து, சாற்று முறையை ‘மின்னுமாமழைதவழும்' (30) என்ற பாசுரம் தலைக்கட்டியதும் இலக்கியப் பெருவிழாவின் முதற்பகுதியான திருமொழித் திருவிழா (பகல் - பத்து உற்சவம்) நிறைவு பெறும்.
- ↑ ஆழ்வார் திரு நகரியிலும், ஶ்ரீவில்லிபுத்துளரிலும் இப்பதிகவியாக்கியானம் இல்லை.