பக்கம்:வைணமும் தமிழும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

127



ஏழாம் திருநாள்: அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி ஏழாம் பத்து. அபிநயவியாக்கியானம் ‘கங்குலும் பகலும்' (7.2;1) என்ற பாசுரத்திற்கு இது தாய்ப் பாசுரம். இன்று ஆழ்வார் பெண்கோலம் கொண்டிருப்பார். முன்நாளில் திருமாலிடம் சரணம் அடைந்ததும் இன்னமும் உலகத்தொடர்பு அற்றுத் திருமாலை அடையவில்லையே என்று தலைவனை அடையாத தலைவியின் நிலையை அடைகின்றார் ஆழ்வார். எம்பெருமானோ, 'ஆழ்வார் இப்பிரபந்தத்தைத் தலைக்கட்ட வேண்டும்; அதுவரையில் அவருக்கு ஆறுதல் அளிப்பது எவ்வாறு?' என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆழ்வார் இதனை அறியாமல் பிரிவுத் துயரால் நலிந்து செயல் மறந்து, மயக்கத்தில் இருந்தார். அது கண்ட நற்றாய் தலைவனிடம் முறையிடுகின்றாள். தாயாகிய அரையருக்கோ ஆழ்வாரைத் காட்டிலும் துயர் அதிகம்; ‘இவள்திறத்து என் செய்கின்றாயே?’ என்று மன்றாடுவது உருக்கமான பகுதி.

இப்பதிகம் ஐந்தாம் பாசுரம் சேவிக்கும்போது ‘அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே!' என்ற விளி வருகின்றது. இப்போது அரையர் தம் சேவையை நிறுத்தி அவுணன் இரணியனின் உடலைக் கீண்ட நரசிங்க அவதாரக் கதையை நாடகமாக நடத்திக் காட்டி, பெருமானுடைய தீர்த்தத்தையும் சடகோபனையும் குழுவாக (கோஷ்டியாக) உள்ள அடியார்கட்குச் சாதித்துவிட்டுப் பிறகு எஞ்சியப் பாசுரங்களைச் சேவிப்பார்.

எட்டாம் திருநாள் : அரையர் இன்று சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி எட்டாம் பத்து. அபிநய