பக்கம்:வைணமும் தமிழும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. வைணவமும் தமிழும்

வைணவம் விட்டுணுவை (திருமாலை) முடிந்த பேருண்மையாகக் கொண்டு திகழும் சமயமாகும். இச்சமயம் பாகவதம், பாஞ்சராத்திரம், சாத்வதம், ஏகாந்திகம் என்ற திருநாமங்களாலும் வழங்கப்பெறும். இறைவனைப் 'பகவான்’ என்று கொள்ளும் வழிபாட்டு மரபு பாகவதம்; பாகவத மரபினர் பாகவத புராணத்தையும், பகவத் கீதையையும் மகாபாரதத்தில் நாராயணீயம் என்ற பிரிவினையும் தங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை நூல்களாகக் கொள்வர். பாஞ்சராத்திர மரபினர் பாஞ்சராத்திர ஆகமங்களைத் தங்கள் அடிப்படை நூல்களாகக் கொள்வர். சிரீகிருட்டிணர் சார்ந்த இனமாகிய சாத்வதத்திலிருந்து பெயர் பெற்றது சாத்வதம். ஒரே ஒரு முடிவைக் கொண்டது ஏகாந்திகம். இவர்கள் நாராயணனே மனிதர்கள் அடைய வேண்டிய மேலான முடிவாகும் என்ற நம்பிக்கையுடையவர்கள்.

வைணவ வழிபாட்டு மரபு விட்டுணுவைப் பரம் பொருளாகக் கருதினாலும் இந்தக் கொள்கையானது சிந்தனைப் போராட்டங்களின் ஒருமித்த நிலையாகும் என்பது ஆர்.ஜி பண்டாரகர் போன்ற ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்தாகும்.[1] அவை(1) வேதங்களில் காணப்பெறும் மூன்று நீண்ட அடிகளையுடைய இறைவனாகக் கருதப்பெறும் விட்டுணுவைப் பற்றிய கருத்து; (2) இயல் உலகு மற்றும்


  1. அவரது Vaishnavism, Saivism and other minor Religious systems என்ற நூலைக் காண்க