பக்கம்:வைணமும் தமிழும்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. வைணவ சீலர்கள்

உடையவர் காலத்திற்கு முன்னும் பின்னுமாக இருந்த ஆசாரியர்களைப்பற்றி வைணவ ஆசாரியர்கள் என்ற தலைப்பில் சொல்லப்பட்டவர்கள் போக உடையவர் காலத்திலிருந்த ஆசாரியர்கள், அடியவர்கள் பற்றிய குறிப்புகள் ஈண்டுத் தரப்பெறுகின்றன.

1. ஆசாரியர்கள் :

(1). திருக்கச்சி நம்பி : சுப்ரதிஷ்டாம்சம். இவர் சென்னைக்குச் சுமார் 24 கி.மீட்டர் தொலைவிலுள்ள பூவிருந்தவல்லியில் பிறந்தவர். தந்தையார் வீரராகவன் என்ற வணிகர்; தாயார் கமலை. தொடக்கக் காலத்தில் கச்சி அருளாளனுக்குப் பூத்தொண்டு புரிந்து வந்தார். பின்னர் அப்பெருமானுக்கு ஆலவட்டக் கைங்கரியம் புரிந்து வந்தவர். உடையவர் இளமைக் காலத்தில் அவருடைய திருத்தாயார் சொற்படி இவருடன் நெருங்கிப் பழகி வந்தார்; அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தார். திருக்கச்சி நம்பி உடையவருக்கு வரதராசப்பெருமாள் திருவுள்ளமாக வெளியிட்ட ஆறு வார்த்தைகள் மிகுபுகழ் பெற்றவை. அவை: (1) திருமாலே பரம்பொருள், (2) சீவான்மாவுக்கும் - பரமான்மாவுக்கும் உள்ள வேறுபாடுபற்றியது (3) பிரபத்தியே (சரணாகதி) சிறந்த முத்தி நெறி (4) மரணகாலத்தில் உள்ளத்தை இறைவனிடம் ஒருமைப் படுத்தவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. (5) சரீரத்தின் முடிவில் பாகவதர்கட்கு முக்தி நிச்சயம் (6) பெரிய நம்பியைக்