பக்கம்:வைணமும் தமிழும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

167


என்று திருவரங்கத்தமுதனார். அருளிச் செய்த இந்த வாக்கில் திருமந்திரதானம் செய்தது போன்ற உடையவரின் கருணைப் பெருஞ்செயல் குறிக்கப்பெற்றதாகக் கொள்ளலாமல்லவா? இத்தகைய வள்ளலை தான்அறப் பெய்து மாயும் தடமுகில்’ என்று உருவகித்தது எவ்வளவு பொருத்தம்? என்று நாம் வியந்து சிந்தித்து மகிழ்கின்றோம். வயது. 105.

(4).திருமாலையாண்டான்: வனமாலை அம்சம்.அழகர் திருமலையில் அவதரித்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். திருநட்சத்திரம் : மாசிமகம், வேறு திருநாமங்கள் மாலாதரர், ஞானபூர்ணர், ஆசாரியர்: ஆளவந்தார். சீடர் : இராமாநுசர். - திருக்குமாரர். சுந்தரத்தோளுடையான். வயது 100

(5).திருவரங்கப்பெருமாள் அரையர்: சங்குகரணாம்சம். திருவரங்கத்தில் ஆளவந்தாரின் திருக்குமாராக அவதரித்தார். ஆசாரியர், ஆளவந்தார்.சீடர்: இராமாநுசர் இசையில் வல்லவர். தெய்வகானமாய் இசைப்பாடல் பாடுவதில் வல்லுநர். இசைக்குப் பிரியரான காஞ்சி வரதராசர் முன் திவ்வியப் பிரபந்தத்திலிருந் து சில பாசுரங்களை இயலாகச் கேவித்தும், இசையாகப் பாடியும், நாடகமாக அபிநயித்துக் காட்டியும் அருளாளனை மயக்கி, அவன் அடிநிழலில் இருந்த இராமாதுசரைத் தந்திரமாக அரங்கனின் அடிநிழலுக்குக் கொண்டு வந்து சேர்த்த தந்திரசாலி. அரங்கத்தில் சில காலம் வாழ்ந்தவர். உடையவர், இவரிடம் நம்மாழ்வார் திருவாய் மொழியையும், மங்கை மன்னனின் பெரிய திருமொழியையும் கற்றுத் தேர்ந்தார். ஆக, பெரிய நம்பியுடன் உடையவருக்கு அறுவர் ஆசாரியராக அமைந்தனர்.