பக்கம்:வைணமும் தமிழும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சிலர்கள்

181

(13). நடுவில் திருவிதிப் பட்டர். இவர் பெரும்புலவர். அரசவைக்கு எழுந்தருளினபோது இவருடைய புலமையைக் கண்டு அரசர் மிகு தனங்களை நல்கினார். அவற்றை நம்பிள்ளையின் திருவடிகளில் சமர்ப்பித்து ‘தேவரீருடைய திவ்விய சூக்தியில் பதினாயிரம் கோடியிலே சிந்தின ஒரு பூர் சூக்தி பெற்ற தவம் இவை. இவற்றை அங்கீகரித்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க, நம்பிள்ளை அவற்றை அங்கீகரியாமல் பட்டரை வாரி அணைத்துக் கொண்டு பல சிறப் புகளைச் செய்தார். பட்டரும் நம்பிள்ளையின் பெருமையைக் கண்டு அவருக்கு “றுiசூக்தி சாகரம்” என்ற திருநாமம் சாத்தி மகிழ்ந்தார். அருளிச் செயல்; “பூர்வத்ஸ் சிஹ்ந, பஞ்சவிம்சதி”

(14). கந்தாடை அண்ணன் : இவரைக் கோயில் கந்தாடை அண்ணன் என்றும் வழங்குவர். மாறனேர் நம்பிக்குப் பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்த பெரிய நம்பிகளை ஸ்ரீவைணவர்கள் தம் சாதியினின்றும் விலக்கி வைத்தனர். ஓர் உற்சவத்தில் திருத்தேர் தன் நிலையை விட்டு அசையாதிருந்தது. கந்தாடை அண்ணனுக்குப் பெருமாள் அர்ச்சகர் மூலமாக “பெரிய நம்பியை உமது திருத்தோளின் மேல் எழுந்தருளப் பண்ணி வாரும் என்ற நியமத்தை உடனே அநுட்டித்துக் காட்டிய உத்தமர். இதனை நிறைவேற்றியவுடன் திருத்தேரும் நகர்ந்து திருவீதி வலம் வந்தது. அரியபெரிய அநுட்டானத்தை நிறைவேற்றிக் காட்டினமையால் “பெரிய நம்பிகள்” என்ற திருநாமம் பெற்றார் போலும்!

(15). கந்தா ஆண்டான்: பிரம்மதந்தர சுதந்தர சீயர் திருவடி சம்பந்தி, முதலியாண்டானின் திருக்குமாரர். குமாரர். கந்தாடை தோழப்பர். வேறு திருநாமம் : இராமாதுசதாசர்.