பக்கம்:வைணமும் தமிழும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சிலர்கள் | 83




(18). பிரதிவாதி பயங்கரம் அண்ணன் : நயினாரா சார்யரிடம் ரீபாஷியம் சேவித்தவர். பெருமாள் கோயிலில் (காஞ்சி) மிகச் செல்வாக்குடன் திகழ்ந்தவர். இவரை மணவாள மாமுனிகள் வருவித்து இவருக்கு முப்பத்தாறாயிரப்படி அருளிச் செய்தனர். இதனைக் கேட்டு வந்த இவர் LOGsTG ffT@JT மாமுனிகளிடம் பஞ்ச சம்ஸ்காரமும் பெற்றனர். இவருக்கு ‘வைணவ தாசர்’ என்ற ஒரு திருநாமும் உண்டு. இவர் அஷ்டதிக்கஜங்களுள் ஒருவர். இவர்தம் அருளிச் செயல்கள்: “ஸ்ரீபாஷ்யவியாக்கியானம் (சுகபட்சியம்) பாகவதவியாக்கி யானம், பிரபத்தி யோக காரிகைகள், அஷ்டசுலோக் வியாக்கியானம்” ஆகியவை.

(19). கந்தான்டதோழப்பர் கந்தாடையாண்டான் திருக்குமாரர். இவர் நம்பிள்ளையிடத்துச் சிறிது பொறாமைப் பட்டு வாசிகமாக அபச்ரப்பட்டார். சிறந்த வித்துவானாதலாலும் திருவம்சப் பிரபாவத்தாலும் பின்பு தெளிந்தார். நம் பிள்ளையின் திருவடிகளைப்பற்றிப் புகழ்ந்து அவருக்கு ‘உலகஆசிரியர் என்ற திருநாமம் சாத்தினார், இவருடைய திருப்பாட்டனார் முதலியாண்டான். திருநாமங்கள் பச்சைவாரணப் பெருமாள் வாராகுதீசர், சீயாம்ஹஸ்தீசர்.

(20). விளாஞ்சோலைப் பிள்ளை: பிள்ளை உலக ஆசிரியரின் திருவடிசம்பந்தி, திருவாய்மொழிப்பிள்ளைக்கு இரகசியப் பொருள்களை உபதேசித்தவர். அருளிச்செயல்: சப்தகாதை, -

விரிவஞ்சி நூற்றுக்கு மேற்பட்ட வர்கள் விடப் பெற்றனர். விவரம் வேண்டுவோர் இவ்வாசிரியரின் வைணவச் செல்வம். பகுதி 2 இல் காணலாம்:


4. தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு (தஞ்சை, 613005)