பக்கம்:வைணமும் தமிழும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வைணவமும் தமிழும்



(vii) சரீர-சரீரி பாவனையும்;

அயன பதத்தாலே;

(viii) தாங்குகின்றவன்- தாங்கப்படும் பொருள் (ஆதாரஆதேய) தொடர்பும்; ‘ஆய பதத்தாலே;

(ix) போகத்தை அநுபவிப்பவன் போக்கியப் பொருள் (போக்தரு- போக்கிய) இவற்றின் சம்பந்தமும் சொல்லப் பெறுகின்றன.

ஆக, திருமந்திரம் இறைவனுக்கும் ஆன்மாவுக்குமுள்ள ஒன்பது வகை உறவுகளைச்சொல்லித் தலைக்கட்டுகின்றது. ஒர் ஆன்மாவுக்கும் பிறிதோர் ஆன்மாவுக்கும் வினைப்பயனால் நேரிடுகின்ற தந்தை-தனயன் முதலிய உறவுகள் அந்த வினைத் தொடர்பு நீங்கும் போதெல்லாம் மாறிவிடுகின்றன. அஃதாவது ஒரு பிறவியில் நேரிடும் தந்தை-தனயன், தாய்-மகன், கணவன்மனைவி போன்ற உறவுகள் அடுத்தப் பிறவியில் (அல்லது வருகின்ற பிறவிகளிலெல்லாம்) தொடர்வதில்லை. TT இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம்,

         எற்றைக்கும் ஏழ்ழ்ை
             பிறவிக்கும் உன்தன்னோடு
         உற்றோமே ஆவோம்;
            உனக்கேநாம் ஆட்செய்வோம் (திருப்29)

என்ற ஆண்டாள் திருவாக்கின்படி இங்கு ஒழிக்க ஒழியாது. அழியாதிருக்கும். அஃதாவது அகாரத்தினால் சொல்லப் பெறுகின்ற எம்பெருமான் மகாரத்தினால் சொல்லப்பெறுகின்ற சீவான்மா இவர்களின் உறவு அநாதியாக இருந்து வருவதாகும்.