பக்கம்:வைணமும் தமிழும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வைணவமும் தமிழும்


என்பது திருவாய்மொழிப் பாசுரம் இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கி விடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார். ஆனால் இப்படிச் செய்ய வேண்டுமென்று தனக்கு முன்பே இறைவன் எண்ணித் தன்னை அடியோடு பருகிவிட்டான் குளிர்பானம் பருகுவதைப்போல. ஆழ்வாருக்கு இறைவன் “உண்ணும் சோறு பருகுநீர்” (67:1) எனலாம்படி இருந்தான். அங்ஙனமே இறைவனுக்கு ஆழ்வார்.'உண்ணும் சோறு பருகும் நீர்” என்று ஆகிவிட்டார். சேதநலாபமே ஈசுவரனுக்குக் குறிக்கோள் என்ற வைணவ சித்தாந்தமும் உறுதிப்படுகின்றது. திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம், இங்கு இறைவன் போகத்தை அநுபவிப்பவனாகவும் ஆழ்வார் போகப்பொருளாகவும் ஆகி விடுவதைக் காண்கின்றேர்ம்

2. அர்த்த பஞ்சக ஞானம்

சம்சாரியான சேதநன் தத்துவஞானம் பிறந்து உய்யும் போது தோன்றுவது அர்த்தபஞ்சகஞானம். திருமந்திரத்தில் இன்றியமையாது அறிய வேண்டுவனவற்றைக் குறிப்பிடும் போது 'அஞ்சர்த்தம்' (முமுட்சு 23) என்று கூறும் முமுட்சு படி இஃது (1) ஈசுவரன் இயல்பு, (2) ஆன்மாவின் இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைவதற்குரிய வழிகள், (5) அப்பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் ஆகும். இவற்றில் ஒவ்வொரு பொருளும் ஐந்து வகைப்பட்டிருக்கும்.

(1) ஈசுவரனின் இயல்பு : என்பது பரத்துவம், வியூகம், விபவம் (அவதாரங்கள்) அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் என்று ஐந்து.