பக்கம்:வைணமும் தமிழும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. வீடு பேற்றிற்குரிய

வழிகள்

வீடு பேற்றிற்கு, அதாவது முக்திக்கு அநுட்டிக்கப் பெறுவதை ‘இதம் அல்லது வழி என்று வழங்குவர். சமயநூல்களில் முத்தி நிலையை அவாவி நிற்பவர்கள் ‘முமுட்சுகள் என்று வழங்கப்பெறுவர். வைணவ சமயத்தில் முத்தியை அடைவதற்கு சித்தோபாயம், சாத்தியோபாயம்’ என்ற இருநெறிகள் உண்டு.

1. சித்தோபாயம் : சித்தோபாயம் என்பது முன்னமே இருக்கும் உபாயம், அஃதாவது இறைவனாகிய உபாயம். இதனை வேதாந்த தேசிகர், .

          மன்னும் அனைத்துற வாய்மருள்
              மாற்றருள் ஆழியுமாய்த்
          தன்னினை வால்அனைத் துந்தரித்(து)
             ஓங்கும் தனிஇறையாய்
          இன்னமு தத்தமு தால்இரங்
             குந்திரு நாரணனே
          மன்னிய வன்சரண் மற்றோர்பற்
             றின்றி வரிப்பவர்க்கே”

[மருள்அஞ்ஞானம்; அருள்-கருணை ஆழி கடல்:தரித்துதாங்கி, இன்னமுதத்து அமுது - இலக்குமி பற்று-உபாயம்; வரிப்பவர்-சரணம் அடைபவர்; வன் சரண் சித்தோபாயம்]


1. தே.பி.-69