பக்கம்:வைணமும் தமிழும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

283


          நிகரில்அமரர் முனிக்க ணங்கள்
              விரும்பும் திருவேங் கடத்தானே!
          புகல்ஒன்று இல்லா அடியேன் உன்
              அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. - திருவாய் 6.10:10.


      [இறை-மிகச்சிறிய நிகர்-ஒப்பு: புகல்-பற்றுக்கோடு]

என்ற பாசுரத்தில் இதனைக் காணலாம். மேலே குறிப்பிட்ட நான்கு திருக்குணங்களும் இறைவனைப் பற்றுகைக்குத் துணை செய்யும் விளக்கத்தைப் பாசுரத்தில் காணலாம்.நிகரில் புகழாய் என்பதனால் 'வாத்சல்யம்’ என்ற திருக்குணமும்’ ‘உலகம் மூன்றுடையாய்' என்பதனால் 'சுவாமித்துவம்' என்ற பெருங் குணமும், 'என்னை ஆள்வானே' என்பதனால் 'செளசீல்யம்’ என்ற மேன்மைக் குணமும், 'திருவேங்கடத்தானே' என்பதனால் சேதநன்கண்டு பற்றுகைக்கு எளியனாக இருக்கும்'செளலப்பியம்’ என்ற உயர்ந்த குணமும் விளக்கம் பெறுவதாக ஆன்றோர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இங்ஙனம் பிரபத்திநெறியைத் தெளிவாக எடுத்துரைத்து வற்புறுத்துவன ஆழ்வார்களின் பாசுரங்கள்.