பக்கம்:வைணமும் தமிழும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

வைணவமும் தமிழும்


     [கமலம்- தாமரை, விண்டேபிளவுபட்டு; தொண்டு
     அடிமைத் தொழில்; பண்டே முன்பே பணித்த_அருளிச்
     செய்த]

என்று செம்மாந்து நிற்கின்றது.

          ஒழிவில் காலமெல்லாம்
              உடனாய் மன்னி
          வழுவிலா அடிமை
              செய்ய வேண்டும். (3.3:1)

என்று ஆராத ஆசை நிறைவேறப் பெற்றதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகின்றது. இந்த அநுபவம் - பகவததுபவம் - ‘பரிபூர்ண பிரம்மாநுபவம்' என்று வேதாந்த நூல்களால் பேசப்பெறும்.