பக்கம்:வைணமும் தமிழும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

வைணவமும் தமிழும்


(viii). யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்க வேண்டா... உன்றன் பைநாகப் பாய்சுருட்டிக்கொள்” என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைப்பிரான் போல்வாருக்கு எல்லாவகையிலும் அடியன்.

(ix). யானை உண்ணும்போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்தவர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோமன்றோ?

(x). யானைக்கும் கை நீளம்: எம்பெருமானும் ‘அலம்புரி நெடுந்தடக்கை ஆயன்” (பெரிதிரு. 1.6:2) அன்றோ? “நீண்டவத்தைக் கருமுகிலை” (பெரி. திரு. 252)

(xi). யானை இறந்த பின்பும் உதவும்: எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய பின்பும் இதிகாசபுராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?

(xii). யானைக்கு ஒரு கையே உள்ளது. எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ணமுடையவன் (அர்த்தி தார்த்த பரிதான தீட்சிதம்)

(xiii), பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை, எம்பெருமானும் அர்ச்சக பரிசாரர்களுக்கு உதவுவான்.