பக்கம்:வைணமும் தமிழும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

23



விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் ‘திருவிக்கிரமம்' என்று பிழைபட எழுதுவர். முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது. எனவே, இவ்வகையான மூவகைவலியையும் காட்டுவதற்காகவே 'உலகளந்தான்' எனக்கூறாது 'தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்’ எனப் பொருள் கொள்ளுமாறு ,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

முன்னம் குறளுருவாய்
மூவடிமண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே
மாலாகிப் பொன்பயந்தேன்-(பெரி.திரு. 9.4:2)

என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் இவ்வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. எனவே இராமன், கண்ணன், வாமனன் எனும் மூன்று அவதாரங்களையும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

(3) இருவகை உலகுக்கும் தலைவன் : நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு. “இருள்சேர்ந்த இன்னா உலகு” 'அளறு ஆரிருள்' எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும், இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் 'லீலாவிபூதி' என்பர். எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய்