இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
வைணவமும் தமிழும்
- திரண்டமார் தொழுதேத்தும் திருமால்நின்
- இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
- நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
- மடங்கலாய் மாறட்டாய் மாயமே மருட்கைத்தே[1]
இவற்றுள் திருமால் கடல் கடைந்த வரலாறும், யசோதைப் பிராட்டியாரின் தாம்பால் ஆப்புண்டதும்; பசியின்றியே உலகெல்லாம் உண்டு தன் திருவயிற்றில் அடக்கியதும்; உலகம் உண்ட வாயாலேயே களவினால் கொண்ட உறிவெண்ணெயை உண்டு களித்ததும் திரிவிக்கிரமாவதார காலத்தில் இரண்டடியால் மூவுலகை அளந்ததும் அதே அடியால் பாண்டவர்க்காக ஒலை சுமந்து தூதாக நடந்ததுமான செய்திகள் குறிக்கப்பெறுகின்றன.
- ‘படர்க்கைப் பரவலாக வரும் பாடல்கள் இவை:
- மூவுலகும் ஈரடியால் முறைதிரம்பா வகைமுடியத்
- தாவியசே வடிசிலம்பத் தம்பியொடு கானபோந்து
- சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
- சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
- திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.
- பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
- விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
- திருவடியும் கையும் திருவாயும் செய்ய
- கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே
- கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே.
- ↑ மேலது ஆய்ச்சியர்குரவை - 35, 36,37