பக்கம்:வைணமும் தமிழும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வைணவமும் தமிழும்



பிரபந்தம் பாசுரத் தொகை
14. முதல் திருவந்தாதி 100
15. இரண்டாம் திருவந்தாதி 100
16. மூன்றாம் திருவந்தாதி 400
17. நான்முகன் திருவந்தாதி 96
18. திருவிருத்தம் 100
19. திருவாசிரியம் 7
20. பெரிய திருவந்தாதி 87
21. திருவெழுக்கூற்றிருக்கை 1
22. சிறிய திருமடல் 1
23. பெரிய திருமடல் 1
ஆக, பிரபந்தங்கள் 10க்குப் பாசுரங்கள் 593

இவற்றுள் 14,15,16 எண்களுள்ளவை முறையே முதலாழ்வார்களான பொய்கையார், பூத்த்தார், பேயார் ஆகியோராலும்; 17 எண்ணுள்ளது திருமழிசைப்பிரானாலும்; 18,19,20 எண்களுள்ளவை நம்மாழ்வாராலும், 21,22,23 எண்களுள்ளவை திருமங்கையாழ்வாராலும் அருளிச்செய்யப் பெற்றவை.

தொகுதிபற்றிய குறிப்புகள்: நாதமுனிகள் தாம் ஏற்படுத்தின திருமொழி-திருவாய்மொழித் (பகல் பத்து இராப்பத்து) திருநாளில் முதலாயிரத்தையும. திருவாய் மொழியையும் தேவகானத்தில் ஏறிட்டுச் சேவித்தார் என்றும், இயற்பாவை இயலாகச் சேவித்தார் என்றும் “கோயிலொழுகு"