இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
வைணவமும் தமிழும்
முதலாயிரம் | 947 | |
பெரிய திருமொழி | 1134 | |
திருவாய் மொழி | 1102 | |
இயற்பா | 593 | |
மொத்தம் | 3776 |
என்றவாறு அமைகின்றது. அஃதாவது இரு மடல்களையும் நீக்கினால் இத்தொகை3774 என்றாகின்றது. இத்தொகை நாலாயிரத்திற்கு (4000-3774) 226 குறைகின்றது. வேதாந்த தேசிகர் தாம் இயற்றிய பிரபந்தசாரத்தில் இருமடல்களையும் 118 பாசுரங்களாகக் கொள்வர்.
- சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
- சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும்[1]
என்பது அவரது திருவாக்கு பிறிதோரிடத்தில் அவர்
- அஹீதனுயர் பரகாலன் சொல் . . . . . . . . . .
- வேங்கட மாற்கு ஆயிரத்தோடு
- ஆணஇரு நூற்றோரைம் பத்து முன்று[2]
என்று திருமங்கை மன்னன் பாசுரங்களை 1253 என்று பேசுவர். மடல் ஒழிந்த நான்கு பிரபந்தங்களிலும் அடங்கிய பாசுரங்கள்,
பெரிய திருமொழி | 1084 | |
திருக்குறுந்தாண்டகம் | 20 | |
திருநெடுந்தாண்டகம் | 30 | |
திருவெழுக் கூற்றிருக்கை | 1 | |
1135 |