பக்கம்:வைணமும் தமிழும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

57



ஆய்வுரை :

யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம். ஆகவே, திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்கள் 3776 என்றும் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்கள் சேர்ந்து அத்தொகை 3884 ஆகின்றது என்றும் அறியக் கிடக்கின்றது. இத்தொகை மிகுதிபற்றி நாலாயிரம் என்றே வழங்கப் பெறுகின்றது என்று கொள்ளலே ஏற்புடைத்து. நாலாயிரத்திற்குச் சில பாசுரங்கள் குறையினும் கூடினும் நாலாயிரம் என்று கொள்ளலே ஏற்புடைத்து.

நாலாயிரத்தில் 4000 பாசுரங்கள் இருந்தேயாக வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்டவே இலக்கணவரம்பையும் மீறத் துணிந்தனர் நம் முன்னோர். இது தேவை இல்லாத கொள்கை, நூறு ஐம்பது குறைந்த கால்களையுடைய மண்டபத்தை ஆயிரங்கால் மண்டபம் என்று கூறுகின்றோ மல்லவா? நான்கு அல்லது இரண்டு கைகளுடன் விடுவிக்கப் பெற்ற வானாசுரனது வதத்தைக் குறித்து ஆழ்வார்கள் “வாணன் ஆயிரத் தோள் துணித்த” என்றும் “வாணன் ஈரைந் நூறு தோள்களைத்துணித்த” என்று அருளிச்செய்துள்ளதைக் காண்கின்றோமன்றோ? பத்துக்குக் குறைவாகவும் பத்துக்கு மேலாகவும் உள்ள பாசுரங்களைச் சேர்த்து ஒரு பதிகமாகக் கொள்ளும் மரபு உண்டல்லவா? 947 பாசுரங்களைக் கொண்ட பகுதியை முதலாயிரம் என்று வழங்குகின்றோம் அன்றோ? அங்ஙனமே திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டிருப்பினும் 'நிரனிரை ஆயிரத்து' (1-1;11), 'சீர்த் தொடை ஆயிரத்து' (1,2;11) 'குருகூர்ச் சடகோபன் ஒராயிரம் சொன்ன' (2,1;11)