பக்கம்:வைணமும் தமிழும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வைணவமும் தமிழும்


தோறும் வரும் பலசுருதிப் பாசுரங்களால் (திருக்கடைக் காப்புச் செய்யுட்களால்) தெளிவாகும். மலை நாட்டுத் திருப்புலியூர் எம்பெருமான் மீது தோழிப் பாசுரமாக அருளிய பாசுரத்தின்[1] பலசுருதிப் பாசுரத்தில் தொண்டர் 'தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன், சொல், நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள் இவைப்பத்தும்' என்று வருவதைக் காணலாம். திருவரங்கப் பெருமான்மீது தாய்ப்பாசுரமாக அருளிய பதிகத்தின்[2] பலசுருதிப்பாசுரத்தில் 'வண்குருகூர்ச் சடகோபன், முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும்' என்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம். மலை நாட்டுத் திருமூழிக் களத்து உறையும் என்பெருமான்மீது மகள் பாசுரமாக அருளிய பதிகத்தின்[3] திருக்கடைக்காப்புச் செய்யுளில் 'வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த; அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும்' என்றும் வருவதை நோக்கலாம். ஏனைய அகப்பொருள் பாசுரங்களிலும் இதே போக்கு இருப்பதையும் கண்டு மகிழலாம். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகி வேறு வேறு பெயர்களைப் பெற்றாலும் அவற்றில் பாய்ந்து செல்லும் நீர் ஒரே ஆற்று நீராக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ஙனமே ஆழ்வாரது சொல் மாலைகள் மூன்று நிலைகளாக வழிந்து புறப்பட்டாலும் அவை ஆழ்வார்களது பாசுரங்களாகவே தலைக்கட்டும்.

(அ) திருவாய்மொழியில் : இது திருமாலவன் கவி[4] என்றும் சிறப்பிக்கபெறும். 'சடகோபன் செந்தமிழ்' என்ற இந்நூலில் நம்மாழ்வார் பகவானை நூறு பதிகங்களால்


  1. கருமாணிக்கமலைமேல் (8-9)
  2. கங்குலும் பகலும் (7:2)
  3. எங்கானல் அங் (9,7)
  4. திருவிருத்தம்-48