பக்கம்:வைணமும் தமிழும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

65



உணர்த்தவே தோழி, தாய், மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று இவற்றை 'அவஸ்தா திரய விருத்தி' (திரயம்-மூன்று அவஸ்தை-நிலை) என்று பேசும் ஆசாரிய ஹிருதயம் (சூத்138)

(1) தோழிப் பாசுரங்கள் : மேற்கூறப்பெற்ற விளக்கத்தி லிருந்து தோழியின் பாசுரங்களினால் ஆன்மாக்கள் யாவும் திருமாலைத் தவிர பிற தெய்வங்கட்கு அடிமைப்பட்டவை (அநந்யார்ஹசேஷத்துவம்) அல்ல எனவும் அவை தமக்குத் தாமே அடிமை அல்ல எனவும் தெளிவாக அறிய முடிகின்றது. திருவாய்மொழியில் தோழியின் கூற்றாக வரும் 'தீர்ப்பாரையாம் இனி' (4,6) 'துவளில் மாமணிமாடம்' (6,5) 'கருமாணிக்கமலை' (8,9) என்ற மூன்று திருவாய் மொழிகளையும் ஊன்றிப் படித்தால் அநந்யார்ஹசேஷத்துவம் தெரியும். எடுத்துக்காட்டாக 'துவளில் மணி மாடத்' திருவாய் மொழியில் பத்தாம் பாசுரம்:

பின்னைகொல்? நிலமா மகள்கொல்?
திருமகள் கொல்?பிறந் திட்டாள்
என்னமா யங்கொலோ? இவள்நெடு
மால்என்றே நின்று கூவுமால்;
முன்னிவந்து, அவன்நின்று, இருந்து
உறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும்; அவ்வூர்த்
திருநாமம் கேட்பது சிந்தையே (6.5:10)

[பின்னை நப்பின்னை; நிலமாமகள்-பூமிப்பிராட்டியார்; திருமகள்-பெரியப் பிராட்டியார்; மாயம்-அதிசயம்; கூவுதல்-அழைத்தல்; சென்னி-தலை; சிந்தை-எண்ணம்]