பக்கம்:வைணவ உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX எம்பெருமான் சிலவற்றுடன் ஒப்பு : எம்பெருமானை யானை (பக் 146), மேகம் (பக் 223), இரத்தினம் (பக் 194), நிதி (பக் 418) ஆகியவற்றுடன் ஒப்புமைப் படுத்திக் காட்ட பெற்றுள்ள செய்திகள் நெஞ்சில் நிலைநிறுத்தப் பெற வேண்டியவை. அருளிச் செயலுக்குரிய வியாக்யானங்கள் அனைத்தும் வடமொழியும் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் அமைந்துள்ளன. அன்றியும் வைணவ சம்பிரதாயத்திற்கே யுரிய சில சம்பிரதாய வாக்கியங்கள், பரியாயச் சொற்கள் ஓர் ஆசானை அணுகிக் கேட்டாலன்றி இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, என்னைப் போன்றவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் முயன்றுள்ளபேராசிரி யர் அவர்களின் அரியபணி-தெய்வப்பணி-யைச் சிறப் பாக வைணவப் பெருமக்களும் பொதுவாகத் தமிழ்நன்மக் களும் போற்றி ஆதரவு காட்டுவார்கள் என்பதற்கு ஐயம் இல்லை. இதுபோன்ற உலகிற்கு உதவியான பணியை. மேன்மேலும் செய்து உதவும் பேராசிரியர் அவர்கட்கு நலமும் வளமும் தந்தருள மாறு எளியேனை ஆட்கொண்ட அண்ணல் சீதா பதியின் திருவடித்துணையை வாழ்த்தி, வணங்குகின்றேன். கம்பர் நிலையம் AJ தேவானுரர்.62 12 4 உழுவலன்பன், அக்டோபர் 1, 1985 பெ. இராமானுஜன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/18&oldid=920787" இலிருந்து மீள்விக்கப்பட்டது