262 வைணவ உரைவளம் அந்தச் சுவர் அன்றைக்குத்தான் வைக்கப்பெற்ற சரச் சுவராகையால், சுவரால் அமுக்கப்பெற்று கள்ளன் மாண்டு போனான். இந்நிலையில் கள்ளனின் உறவினர் வந்து அந்தணனைப் பழிதர வேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். பின்னர் இரு திறத்தாரும் அரசன்பக்கல் சென்றனர். அந்த அரசனோ அறிவற்றவன்: மூர்க்கன். அவன் அந்தணனை நோக்கி, அந்தணா, நீ ஈரச்சுவர் வைத்ததனாலன்றோ அவன் முடிந்தான். ஆகையால் நீ பழிகொடுக்க வேண்டும்" என்றான். அந்தணன், ஐயா, இது எனக்குத் தெரியாது: சுவர் வைத்த பணியாளைக் கேட்கவேண்டும்' என்று பதிலிறுத்தான். பின்னர்ப் பணியாளை வரவழைத்து, 'நீ தானே ஈரச்சுவர் வைத்தாய்; நீதான் பழி தரவேண்டும்' என்று சொல்ல, அவனும், தண்ணிர் விடுகின்றவன் அதிக மாக விட்டிட்டான்; நான் இதற்குப் பொறுப்பல்லன்' எனத் தப்பித்துக் கொண்டான். பின்னர்த் தண்ணிர்விட்ட வனை அழைத்து விசாரித்தபோது அவன், குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனால் நீர் அதிகமாயிற்று; நான் என்ன செய்வேன்?' என்று கூறி நழுவினான். குசவன் அழைத்து விசாரிக்கப் பெற்றான். அவனும், என் னால் வந்ததன்று; நான் பானையைச் சிறிதாகவே செய்ய நினைத்தேன்; அதனைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேசி போகவரத் திரிந்தாள்; ஏன் கவனம் கலைந்தது. அவளைப் பார்க்கின்ற பராக்கிலே பானை பெருத்து விட்டது. நானென்ன செய்வேன்?' என்று மறுமொழி கூற, பிறகு தாசியை அழைத்து விசாரிக்கும்போது, அவளும், :என்னால் வந்ததன்று; வண்ணான் என் சேலையை விரைவில் தராமையாலே நான் போகவரத் திரிந்தேன்' எனப் பதில் கூறிவிட்டாள். பிறகு வண்ணான் அழைத்து விசாரிக்கப் பெற்றான். அவனும், ஐயனே, நான் இதற்குப் பொறுப்பல்லேன்; துணிதுவைக்கும் துறையிலே கல்லின் மீது ஒர் அமணன் (திகம்பர சாமி) உட்கார்ந்திருந்தான். எவ்வளவு உரப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பிறகு சேலையைத்