事00 வைணவ உரைவளம் 186 குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை பழகியாம் இருப்போம் பரமேஇத் திருவருள்கள் அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவி மைதகு வார்ப லருளர் கழகம்ஏறேல் நமபீ! உனக்கும்.இளை தேகன்மமே.”* (குழகி-லீலா ரசம் கொண்டாடி; குழமணன்மரப்பாச்சி; கோயின்மை - கேட்பாரற்ற செயல்கள்; கன்மம்-காரியம்; திருஅருள்கள் -ஆசைப் பெருக்கான காரியங்கள்; அழகி யார்-அழகிற் சிறந்தவாகள்; தேவிமைதேவிகளாக இருக்கும் தனமை; கழகம்திரள், கூட்டம்; கன்மம்-செய்கை; இளைதே. -இளமைப் பருவத்திற்குரியது! 'மகள் பாசுரம்': தலைவன் தாழ்த்து வரககண்ட தலைவி ஊடல் கொண்டுரைத்தலாகிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம். வசீகரித்தற்குரிய செயல்களைச் செய்து எங்களு டைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை; நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங் கட்கும் உம்மோடு தக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உணர்; நம்யி! எங்கள் கட்டத்தில் ஏறாதே; உனக்கும் இஃது இளமைப் பருவத்திற் குரிய செயலேயாம்' என்கின்றாள் பராங்குச நாயகி. 'கழகம் ஏறேல் கம்பீ' : நீ எத்தனை பேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது; மேல் விழுந்து தீண்டாதே.