இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவாய்மொழி 439 அகப்பட்ட குழந்தை தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவு படுமாறுபோலே இருக் கிறது' என்று பணிப்பர். 2O4 விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லணிவை மண்ணு ளென்னைப் பெற்றாலென்செய் யாமற்று யுேம் விட்டால் பண்ணு ளாய்! கவி தன்னு ளாய்! பத்தியி னுள்ளாய்!பர மீசனே! வந்தென் கண்ணுள் ளாய்! நெஞ்சு ளாய்! சொல்லுளாய்! தன்றுசொல் லாயே2 (விண்ணுளார் - விண்ணில் உள்ளவர்களான; அடிமை செய்வார் - நித்திய சூரிகள்: செறும்-நவியும்; மண்ணுள் - பூமியில்; என்னைப் பெற்றால் - என்னிடம் வந்து சேர்ந்தால், மற்று-மேலும்; விட்டால்கைவிட்டால்; பரம் ஈசனே-மேலான ஈசன்; ஒன்று சொல்லாய்-ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும்;
- இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறு வேன்' என்று ஆழ்வார் வருந்துவதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், பண்ணில் இருக்கின்றவனே! கவியில் இருக்கின்றவனே! பக்தியில் இருக்கின்றவனே! மேலான ஈசனே! எனது கண்ணில் இருக்
2. திருவாய் 7.1 : 5