viii
சங்கரன் உமையோ டுவப்புடன் மேவித்
தகவுறு பெருங்களிப் பெய்தும்
வெங்கனூர்ச் சிற்பம், சிவப்பிர காசர்
மேதினிக் களித்நகன் னூல்கள்
கங்கைபோற் பெருகும் காவடிச் சிந்து
காசினிக் கிக்குலம் புரிந்த
துங்கமார் தொண்டை வியப்புற விளக்கும்
துவங்குக இக்குலம் என்னும்.
3
இத்தகு புகழ்சால் குலத்துலோர் புரிந்த
இணையிலா நற்றவத் தாலே
வித்தகம் மிக்க செந்தமிழ் உயர,
மேவிய பல்கலை ஒளிர,
எத்தலங் களிலும் அறிவியல் பொலிய
இணையிலா முயற்சியே வடிவாம்
சித்தமொ டுதித்தார் பல்கலை யாவும்
தேர்சுப்பு ரெட்டியாம் தோன்றல்.
4
உலகினுக் கன்றே சமரசர் தன்னை
உணர்த்திய எதுமலை என்னும்
தலமதில் மேவும் தெய்வங்கள் அருளத்
தகவுறு கல்வியி லுயர்ந்து
நலமுறு துறையூர் உயர்நிலைப் பள்ளி
நவையறு பெயர்பெற உழைத்துப்
புலமமை காரைக் குடியினிற் கல்விப்
புனத்தினைக் காத்தனர், அன்பர்,
5