பக்கம்:வைணவ உரைவளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

சங்கரன் உமையோ டுவப்புடன் மேவித்
    தகவுறு பெருங்களிப் பெய்தும்
வெங்கனூர்ச் சிற்பம், சிவப்பிர காசர்
    மேதினிக் களித்நகன் னூல்கள்
கங்கைபோற் பெருகும் காவடிச் சிந்து
    காசினிக் கிக்குலம் புரிந்த
துங்கமார் தொண்டை வியப்புற விளக்கும்
    துவங்குக இக்குலம் என்னும்.

3


இத்தகு புகழ்சால் குலத்துலோர் புரிந்த
    இணையிலா நற்றவத் தாலே
வித்தகம் மிக்க செந்தமிழ் உயர,
    மேவிய பல்கலை ஒளிர,
எத்தலங் களிலும் அறிவியல் பொலிய
    இணையிலா முயற்சியே வடிவாம்
சித்தமொ டுதித்தார் பல்கலை யாவும்
    தேர்சுப்பு ரெட்டியாம் தோன்றல்.

4


உலகினுக் கன்றே சமரசர் தன்னை
    உணர்த்திய எதுமலை என்னும்
தலமதில் மேவும் தெய்வங்கள் அருளத்
    தகவுறு கல்வியி லுயர்ந்து
நலமுறு துறையூர் உயர்நிலைப் பள்ளி
    நவையறு பெயர்பெற உழைத்துப்
புலமமை காரைக் குடியினிற் கல்விப்
    புனத்தினைக் காத்தனர், அன்பர்,

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/6&oldid=1528129" இலிருந்து மீள்விக்கப்பட்டது