பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




அடுத்தது ஆற்றுப்படலம். இந்நூல் சிறந்த காப்பியமாக ஆசிரியர் கருதிப் பாடினார் என்பதை உணர்த்தும் திரிபு, யமகமாக 20 பாடல்கட்கு மேல் இங்கு உள்ளன. எடுத்துக்காட்டாகச் சில காட்டுவோம்.

ஆகமாக வளாகங் கலக்குமே
யாகமாக வளாகங் கலக்குமே
நாக நாகமை நாகம் புரையுமே
நாக நாகமை நாகம் புரையுமே

காலை யேநிகர் போவதும் காலையே
மாலை யேஎன நாறலு மாலையே
சேலை யேறலை விந்தைதன் சேலையே
பாலை யேய்வன பாலை வனபாலையே.

ஆறு என்பது இங்கு வையை இது வேகவதி, வையை, கிருதமாலை எனும் பெயர்களைப் பெற்றது என்று ஆசிரியர் காட்டுவார்.

வேக மாதலில் வேக வதியென்றும்
மாகம் வாய்ந்தத னால்வையை என்றும்தார்
ஆக லாற்கிருத மாலை யாம்ன்ன்றும்
நாகர் முப்பெயர் நாட்டும் நதியரோ.

என்பது பாடல்.

அடுத்தது நாட்டுப் படலம். உம்பர்கோன் வாழி என்று உழவர் செந்நெல் வித்துகின்றனர். பயிர், தருமம், பாத்திரம் அறிந்து செய்தவர் குலம் தழைப்பதுபோல் கிளை தோன்றுகின்றது. நெற்களங்கள், பண்டு நான்முகன் பரப்பிய தளிகை யோதனங்கள் போல் விளங்குகின்றன. இப்பகுதியில் தமிழ் இலக்கணச் செய்திகள் பலவும், கருத்துகள் பலவும் நுவலப்பெற்றுள்ளன.

அடுத்தது நகரப் படலம். இங்கும் பெருங்காப்பியம் போலவே சொல் தொடையும் பொருள் தொடையும் அமைய ஆசிரியர் பாடுகின்றார். நாக பாயலைப் போன்றது கூடல் மாநகரம். ஒரு சந்தப் பாடல்

82