பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ. இருசமய விளக்கம்


 எதிராசர் இறுதியாக, இவர் தலைகீழாகச் செப்புகின்றார். அரிதாசரின் துதிகளுள் ஒன்று:

விரியோத நெடுங்கடல்சூழ் வியனுலகிற்
கமலவிழி மேக மேனிக்
கருதாத பகவனுல கெவ்வுயிரும்
படைத்தளித்துக் காக்குந் தன்மை
பிரிவேது மில்லாது பழமறைகள்
துணிபொருளைப் பேணிப் பேசும்
அரிதாசர் இருசரணம் என்றுசிரத்
துணிந்துதுயர் அகற்றினேனே.

எனபதாம்.

நூற்பயன்: இதுபற்றி ஒரு பாடல்:
வளங்கெழு செல்வ முண்டாம்,
மனக்கருத் தெல்லாம் முற்றும்
களங்கமில் ஞானம் எய்தும்;
காட்சிசேர் முத்தி வாய்க்கும்;
தளங்கமழ் துளவக் கோலத்
தாரரி நாதன் வாக்கால்
விளங்கிரு சமய நூலின்
மெய்ப்பொருள் விளம்பு வார்க்கே.
.

என்பது

பழிச்சினரைப் பரவல்: இதுபற்றி இரண்டு பாடல்கள்:
செதுமதிய ரிடும்புகூர் சிறியவரோ டிணங்கியே
திரிதருமெனை யன்பிலா சிலவுறுதி விளம்புகேன்
இதுபொருண் மருள்தங்கிடா தினிதுணர்தி யென்றுநீடு
இருசமய விளங்குநூல் எனதிதயம் அழுந்தவே
முதுகுருவடி வங்கொளா முறைதவறுதல் அன்றியே
முழுவுறவக ளங்கமாய் மொழிமுதன் மையன்எம்பிரான்

93