பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்



மதுகையிலும் சிங்கவேர் வயிணவாகுல துங்கனாம்
வழிவழங்கிய நம்பிசே வடியிணைகள் வணங்குவாம்.
கந்தர விலங்குபழ மறைகட்கு மாறாய்
சொல்லுமெழு நான்காகமம்
துன்மார்க்க மென்றுதெரி யாமற் புகழ்ந்திடுந்
துட்டர்கள்செய் செருவடங்க
வாதனைக் கருகன்மா லென்றுவெளி யிட்டாண்ட
வடிவழ கியான் நம்பிபொன்
மலரடி பணிந்துநங் குருவா யடைந்துமிக
மனமகிழ்ந்தே யுயர்ந்தோன்

சந்ததஞ் சிறியவர்க ளோடே யினங்கித்
தலத்திற் பிரிந்தஎன்னைத்
தயையினா லேயழைத் திருசமய நூலினைச்
சங்கையற யோதியேநீ
சிந்தையி லினித்தெளித் தேயறிந்தி டெனவுரை
செப்பியறி வித்தஆசான்
செயசமய சிங்கேறு பெத்தபெரு மாளெனும்
செல்வனடி போற்றுவோமே.

என்பவையாகும்.

நூற்பொருள்: 'இரு சமய விளக்கம் ஒரு விசித்திரமான பெருநூல்.இதனுள் அரிதாசர் இரண்டு பெண்களை நதிக்கு அனுப்பி நீராடச் செய்கின்றார். அவர்கள் இருவரும் திருமால் அடியவளும் சிவன் அடியவளும் ஆவர். பெயர்கள் முறையே ஆரனவல்லி, ஆகமவல்லி என்பனவாகும்.

செல்லும் திரளில் திருஆழியும்
சங்கும் மென்தோள்
புல்லும் குறியும்திரு நாமமும்
பொற்பு லாவும்

94