பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்தது. 3600 சுலோகங்களுடையது. மகா பாகவதம் என்று இது வழங்கும். இதில் 25 கீதைகள் உள்ளன. ஆறு அவதாரக் கதைகள் இதில் நுவலப் பெறுகின்றன. பெரும்பாலும் அனுட்டுப்புச் சுலோகத்தாலும் சிறுபான்மை பிறவற்றாலும் செய்யப் பெற்றுள்ளது. அத்தியாயம் 600, அத்தியாயம் ஒவ்வொன்றின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்து உண்டு. நாரத முனிவர் உருக்குமினிப் பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் பரீட்சித்து மன்னனுக்கு இது சுக முனிவரால் சொல்லப் பெற்றது. இதுவே பதினெண் புராணத்துள் ஒன்று என்பர். இதனையே தமிழில் அருளாளதாசர் பாடினார்.

வரதராச ஐயங்கார் என்றும் சொல்வதைக் கேட்டுள்ளோம். ஐயங்கார் என்பது பிற்கால வழக்கு, 17-ஆம் நூற்றாண்டில் பல பிரபந்தங்கள் பாடிய அழகிய மணவாளதாசர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என வழங்கப்பெறுகின்றார்.இதற்குமுன் இச்சொல்லுக்குச் சிறப்பான ஆட்சி இருந்ததாகத் தெரியவில்லை. வரதன், வரதராசன், வரதையன் என்றே இவர் பெயர் வழங்கப்பெற்றது. 16-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 'ஐயங்கார்’ என்ற சொல்லாட்சி பெருகிவிட்டபடியால் 'ஐயன்', 'ஐயங்கார்' ஆகிவிட்டார் போலும்.11பாடல்கள் பகரும் வரதர் எப்படி அருளாளதாசர்  என்பது தெரியவில்லை. 'தாசர்’ என்று பெயர் சூட்டிக் கொள்வது அக்காலத்தில் வைணவத்தில் ஒரு சிறப்பாகக் கருதப்பெற்றது போலும். பிள்ளை உறங்கா வில்லிதாசர் (12-ஆம் நூற்றாண்டு) கூர குலோத்துமதாசர் (14-ஆம் நூற்றாண்டு), அரிதாசர் (16-ஆம் நூற்றாண்டு), மணவாளதாசர் (17-ஆம் நூற்றாண்டு) முதலான வழக்குப் பெயர்களை நோக்கினால் இவ்வுண்மை ஒருவாறு தட்டுப்படும்.

நூல்: இத்தமிழ் பாகவத புராணம் 'வாசுதேவ கதை’ என்றும் 'புராண பாகவதம்’ என்றும் பெயர் பெறும் 132 படலங்களும் 9147 பாடல்களும் கொண்டது. செவ்வைச் சூடுவார் பாகவதத்தைப் போல் இதில் கந்தப் பாகுபாடு இல்லை. முதலில் உள்ள கடவுள் வாழ்த்துப்

11 இக்காலத்தில் அம்மரபு பெருவழக்காகி விட்டதைக் காண்கின்றோம்.

36