பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராணபாகவதம்


இரவியைக் கண்டாள், வானின்
இந்துவைக் கண்டாள், எட்டு
வரையினைக் கண்டாள், ஏழு
மகோததி தன்னைக் கண்டாள்
கரியிரு நான்கும் கண்டாள்,
கனகமாங் கிரியைக் கண்டாள்

ஏருறத் திசையின் வைகும்
எண்மரைக் கண்டாள், வானில்
தாரகைக் கண்டாள், தேவ
தவத்தினர் குழாத்தினைக் கண்டாள்
பாரினைக் கண்டாள், ஆயர்
பாடியில் தன்னைக் கண்டாள்
சீருறு மகனைக் கண்டாள்,
சிறந்ததன் கைக்கோல் கண்டாள்

ஏதிவன் இயற்கை என்னா
ஏங்கினள் இருகண் மூடி
ஆதியாய் அகண்ட மெல்லாம்
தன்வயிற் றடக்கி நின்ற
சோதியாம் இவனை என்னே
என்மகன் என்று சொல்லும்
பேதமை என்ன வென்று
பீதிகொண் டசோதை நின்றாள்

அனைத்தும் அற்புதமான காட்சிகள்.

பாரதப் போர் பகருமிடத்து தொடக்கத்திலுள்ள கீதை உபதேசத்தை இங்கும் இயம்புகின்றார். 'பாரதப் படலம்' என்ற பகுதி போரைச் சொல்வது. இதனுள் 12 பாடல்கள் கீதை உபதேசம், கருத்து, கண்ணன் 'யாவும் நானே' என்று நவில்வது.

47