பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராண பாகவதம்


பவந்தனை ஒருவுந் தீர்த்தயாத் திரைஒண்
பரமனாம் முராரிதன் பத்தி
அவந்தனை அகற்றும் பரவுப காரம்
அறிஞனா யுளம்மகிழ்ந் திருத்தல்
கவந்தனைக் களைந்தோன் அருச்சனை யிவைதான்
துவதசங் கலக்கமில் நியமம் (5)

பரமனாம் எனது பதந்தனில் கருத்தைப்
பற்றுவித்து அமர்தல்சற் குணமாம்,
சரீரவிந் திரிய மொடுக்குதல் தவமாம்
சவுசமே கருமத்தை யொழித்தல்,
இருநிலத் திடுக்கண் கழிப்பது பொறையாம்,
இருள்தரு காமத்தை ஒழித்தல்
அரியமா தவமாம், தியாகம்இல் வாழ்க்கை
அகற்றுசந் நியாசமே ஆகும் (6)

தருமமே தனமாம், தயங்கிய பிராணா
யாமமே சரியிலாப் பரமாம்,
விரிவுறு மவிதோய் வேள்வி யேயான்
ஆகிய வரிவிளம்பு தக்கணைதான்
மருளகல் குருவாய் மலருஞா னோப
தேசமாம், வருதயி ரியமாம்
விரகமோ டிரத மொருவதல், கலரை
வெறுத்தலே சவுரியம் ஆகும் (7)

ஆற்றுஞ் சமமே அவமில்சத் தியமாம்
அரையுநல் வசனமே உண்மை,
தோற்றும்ஈ றிலாமுராரியாம் எனையே
துதித்திடும் பத்தியாம், வித்தை

51