பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


சாற்றிடில் பரமாத்து மாவினை அறிதல்
சரியிலா விபவமா வனதான்
ஏற்றமா கியவை குந்தத்தினில் அங்கும்
ஈசுரன் இணையடி சேர்தல் (8)

ஆசையற் றிடுதல் திருவென லாகும்,
அளித்திடு தானமே தென்னில்
ஏகற நிலத்தில் பலபிரா னியையும்
தெண்டியா தொழிதலாம், இலச்சை
மாசுறு கருமம் தனின்மன மொழிதல்,
மறுவிலாச் சுகமின்ப துன்பம்
பாசம்அற் றிடவே கடக்குகை, துக்கம்
பலமுறு காமநத் திடுதல் (9)

உறவுசற் குருவாம் கவர்க்கமாம் அவன்தாள்
உயர்ந்தசாத் திககுண மலிதல்
மறலிதன் உலகின் நிரைய மாவது
தாமத குணம் வளர்தல், ஒண்மனையே
அறிவுறு கருத்தார் சரீரநல் லாள் இலா
அச்சுத னாமெனை அடைதல்,
வெறியுறு நெறியா வதுமனம் எங்கும்
விரிந்துகுத் திரதெய்வத் தமர்தல் (10)

அருளிலா தவன்இந் திரியநிக் கிரகம்
செயுநல னறிவி லாதவனாம்
மருடரு மதிக மூர்க்கனாங் காரம்வளரநான்
சமர்த்த னென்று அமர்வோன்
திருவரும் வறியன் சேர்ந்திடும் பொருளில்
சிந்தையில் பிரிதியில் லவனே

52