வை.பு.இ.புரானபாகவதம்
அற்பமா மசுரரக்
கிடாதெமக் குவந்தளித்த
அற்புதா அமலா
பள்ளியுணர்ந்தரு ளாயே
நூலில் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக வருகின்றன. முதலாவதாக வசுதேவர் தேவகியை மணம் புரிவதிலிருந்து வாணாகரன் மகள் உடாங்கனையை (உஷையை அநிருத்தன் மணம் புரிகின்ற வரையில் குறிப்பிடப் பெற்ற பதினைந்து திருமணங்களிலும் மாலையிடுதல், கனலிடை ஆகுதிகள் சமித்துடன் நிறைத்தல், மங்கள நாணினைப் பூட்டுதல், பொரி அக்கினியில் பெய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல் என்ற சடங்குகள் தவறாது குறிப்பிடப் பெறுகின்றன.
அங்கி யின்நிறை யாகுதி பெய்தனர்
சங்கு பேரி கழன்றிடச் சாகைமா
நங்கை நப்பினை நற்கந் தரத்தினிற்
செங்கை மங்கல நாண்செறித் தானரோ,
மற்று மாகுதி செய்து வலமுறச்
கற்றித் தேயுவைத் தாய்மலர்த் தாளிறை
பற்றி அம்மி மிதித்துப்பல் லாண்டெழ
உற்று நோக்கினர் உம்பர் அருந்ததி.
என்ற பாடல்களில் இவற்றைக் காணலாம்.
பிறிதோரிடம்,கண்ணனின் மகனான சாம்பன்,துரியோதனன் மகள் இலக்கணையை மணம் புரிகின்றான். அந்த இடத்தில் வரும் ஒரு பாடல்;
அருமறை யவர்க ளெல்லாம்
ஆகுதி செய்யச் சாம்பன்
தெரிவைதன் கந்த ரத்திற்
சிறந்தமங் கலநாண் சாத்தி
59