உலகம் அறிவுபெற, பல பயனுள்ள நூல்களை இயற்றி, அவற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களைத் தெளியவைப்பதன் மூலம் உலகப் பெருந் தொண்டு ஆற்றி வரும் எழுத்தாளர்கள் பலர். அவர்களில் ஒருவரே, நம் 'தமிழ்ச்செம்மல்', 'கலைமாமணி', ’ஸ்ரீ சடகோபன் பொன்னடி’ பேராசிரியர் முனைவர் சுப்பு ரெட்டியார் அவர்கள்.
இப்பெருந்தகையார் இயற்றிய பல அரியநூல்களில் ஒன்றுதான் இந்த ’வைணவப் புராணங்கள்’ என்னும் நூல். இது வைணவம் சார்ந்த அரிய ஆராய்ச்சி நூல்.
இந்த நூலில் ’இதிகாச பாகவதம்', 'புராண பாகவதம்', ’திருக்குருகை மான்சியம்’, ’கூடற்புராணம்’, ’இரு சமய விளக்கம்’ என்னும் ஐந்து நூல்களைப் பற்றிய ஒருநிலையான ஆய்வுகள் உள்ளன.
இந்த ஐந்து நூல்களைப் பற்றிய செய்திகளை அறிவதற்கு உதவும்படியாய்ப் புராணம் என்றால் என்ன? புராணம் எப்போது தோன்றியது? புராணம் ஆன்மாவுக்கும் சமுதாயத்திற்கும் புரியும் தொண்டு என்ன? புராணங்கள் பல்வேறு மதங்களில் எப்படியெல்லாம் உள்ளன என்பன போன்ற செய்திகளை உடலுக்கு ஒரு முகம் போல விளக்குகின்றார் ஆசிரியர்.
இவர் எடுத்துக்கொண்ட நூல்களின் வரிசையைப் பார்த்தால் எல்லாமே மிகப்பல வைணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத இலக்கியங்களே என்பது புரியும். வரிசை நிரலிலும் அறிமுகம் ஆகாதது, மேலும் அறிமுகம் ஆகாதது என்று ஐந்தும் அமைந்
-vi-