வை-பு-இ-புரான பாகவதம்
சாணினும் உளன்ஒர் தன்மை
அணுவினைச் சதகூ றிட்ட
கோணினும் உளன்,மா மேருக்
குன்றினும் உளன்இந் நின்ற
தூணினும் உளன்நீ சொன்ன
சொல்லினும் உளன்.இத் தன்மை
காணுதி விரைவில் என்றான்
நன்றெனக் கனகன் நக்கான்
என்பது. இதனை நினைந்த வண்ணம்,
நொய்ய தாகும் அணுவினை நூறெனக்
கொய்து விட்ட கோணங்கள் தோலுளன்
வையம் வானம் வடவரை மீதுளன்
மெய்யுட் டோன்றி விளங்கிய மாமுதல்.
நிகரி வாத என்நெஞ்சி லுளன்இவன்
புகலும சொல்லி னுளன்,மணிப் பூணுளன்
இகழ்வில் உன்னி தயப்பங் கயமெனும்
முகையின் விஞ்சும் பொருட்டுள மூர்த்தியோன்.
என்ற பாடல்களை அமைக்கின்றார் இந்நூலாசிரியர். இவற்றோடு கம்பர் பாடலை ஒப்புநோக்கி உணர்க.
'நம்பியைக் காண நங்கைக்
காயிரம் நயனம் வேண்டும்'
என்ற கம்பர் பாடல் இவ்வாசிரியர் வாக்கில்,
மாயன் வடிவின் னலம்மகிழ்ந்
தினிது நோக்க
ஆயிழை உனக்கு விழிஆயிரம்
வேண்டும்
என்று வருகின்றது. இரண்டையும் ஒப்புநோக்குக.