பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


சிறந்திடுதிங் களினாளுத் தரத்தில் ஏகா
தெசிமகா முகுந்தமிவை திருத்த முற்றத்
துறந்தவரெண் மகிழ்மாறர் திருமுன் னாதிச்
சுருதியுடன் மிகுதியுஞ்சொற் றமிழின் வாய்மை
பிறந்தபெருங் காப்பியமும் தெரிந்தோர் கேட்கும்
பெற்றியுடன் அரங்கேற்றப் பெற்ற தன்றே.

என்றது காண்க.

பதிகம் எனத்தக்க ஏழு பாடல்களும் இதன்பின் உள்ளன. பொதுவாய் எல்லாப்புராணங்களும், பின்னால் உள்ள சருக்கங்களின் பெயரை ஒன்று விடாமல் நிரலே பதிகத்தில் கூறும் மரபு உண்டு. ஆனால் இப்பதிகம் அவ்வாறு அமையவில்லை. சருக்கங்கள் பல சொல்லப் பெறவில்லை. சொன்னவையும் முறையாக அமையவில்லை. இறுதிஇரு பாடல்களில் நாம் காரியார் சேயாய், நம்மை நாம் புகழ்வான் வருகுவம் என நவின்று, எம்மையாண்டவன் புகழ்ச் சடகோபனாகி, வேதம் நாலையும் நால்வகைப் பனுவலாய் விரித்தவாய டையும் புகல்வாம்’ என்கின்றார்.

நூல்: நூல் வாழ்த்தோடு தொடங்குகின்றது. வாழ்த்து’ என்ற பாடல் கடவுள் வணக்கத்துக்குப் புறம்பாகத் தொடக்கத்தில் காணப் பெறுகின்றது.

வாழி வாழிகா னிலமும்மும்
மாரியின் வளனும்
வாழி வாழிஇல் லாமும்நல்
லாற்பெரு வனப்பும்
வாழி வாழிநா லாயிரப்
பனுவல்நான் மறைநூல்
வாழி வாழிசீ பராங்குச
ஆணை வைகலுமே.

கடவுள் வாழ்த்துப் பகுதி இரண்டே பாடல்கள். முதற் பாடல் திருமால் காப்பு.’ இரண்டாம் பாடல் குரு வணக்கம். காப்புச் செய்யுளில் முத்தொழில் செய்யும் மூவரையும் குறிப்பிடுகின்றார்.

70